Monday, October 31, 2011

மகனின் அகராதி


ஒருபோதும் மகனுக்குக்

குண்டிக் கழுவிவிடாதக்

கணவனைச் சீண்டினாள் மனைவி,

“அப்பாக்கிட்ட முத்தம் கேள்”



“அப்பா என்ன அம்மாவா?”

என்ற மகனின் அகராதியில்

அம்மா மட்டுமே முத்தமிடுபவள்

தாய்ப்பால் தருவதைப்போல்.


9 நீட்சி(கள்):

ஆதவா said...

கணவனைச் சீண்டினாள் என்று சொல்லிவிட்டு, மகனிடம் கேட்பது இடறலாக இருக்கிறதே!!! அதை கவனியுங்கள்!!!!

மற்றபடி நீங்கள் சொல்ல வரும் கருத்து எனக்குப் புரிந்தது... அதன் தீவிரம் அழகு வாய்ந்தது... தீவிரமானது!!

எல்லா அப்பாக்களும் முத்தம் தராதவர்கள் அல்ல///

ச.முத்துவேல் said...

@ஆதவா
சரியாகத்தான் கவனித்து சொல்லியிருக்கிறீர்கள். தகப்பனை என்றுதான் முதலில் நானும் எழுதியிருந்தேன். பின் ஏனோ,இப்படி மாற்றியிருக்கிறேன். ”மகனின் மூலம் கணவனைச் சீண்டினாள்” என்று பொருள் வருகிறதா? இல்லையென்று பட்டால் மாற்றிவிடலாம். இதுபோன்ற ஆலோசனைகளை, மனதார வரவேற்கிறேன்.இதற்காக சிறப்பு நன்றி.

/எல்லா அப்பாக்களும் முத்தம் தராதவர்கள் அல்ல///

உண்மைதான். அப்படியில்லாத ஒரு அப்பாவின் உறுத்தலான பதிவுதான் இது.பெண்ணின் பெருமையையும் பேசுகிறது.

yathra said...

அம்மா முத்தம் கூட கிடைக்காதவன்

என் குழந்தையை என் அம்மா
முத்தமிட்டு கொஞ்சுகையில்
பொய் சொல்ல விருப்பமில்லை
பொறாமையாகத் தான் இருக்கிறது

அன்புமணி said...

இதற்குத்தான் பிள்ளைங்களை ஆம்பிளைங்களும் கவனிக்கணும்கிறது. நான் இந்த விசயத்தில் என் குழந்தைகிட்ட தெளிவா இருக்கேன்.

ச.முத்துவேல் said...

@யாத்ரா
நிங்கள் சொல்லியிருப்பது நன்றாகயிருக்கிறது.
@அன்புமணி
ஆமாம். அப்படித்தான் இருக்கணும்.உங்கள் பிள்ளை கொடுத்துவைத்தவன்.

அரட்டை அகிலன் said...

முத்து வேல்
நான் இன்னும் மனைவி கிட்ட
பேச்சு வாங்கிற சூழ்நிலைக்கு வரல ....

வாழ்த்துக்கள் ......

அரட்டை அகிலன்

ச.முத்துவேல் said...

@அரட்டை அகிலன்
நல்வரவு.
/நான் இன்னும் மனைவி கிட்ட
பேச்சு வாங்கிற சூழ்நிலைக்கு வரல ..../

என்னுடைய வாழ்த்துகள். நன்றி.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

குழந்தைகளின் அகராதி தூயது. பொய் முகங்கள் இருக்காது. சுருக்கமான நல்ல பதிவு

ச.முத்துவேல் said...

@ நல்வரவு டாக்டர் எம்.கே.எம்.
அழகாகச் சொல்லீருக்கிறீர்கள். நன்றி.