Friday, January 1, 2010

சாளரத்தில் தெரியும் வானம்-தொடர்-அனிதா


 
என் பார்வையில் படைப்பாளிகள்
 
கவிஞர் அனிதா
 
கனவு கலையாத கடற்கன்னி என்னும் முதல் தொகுப்பின் மூலம் நன்கு கவனம் பெற்றிருப்பவர் அனிதா.எப்போதோ படித்த ஒரு கவிதையின் உள்ளடக்கமோ, சாரமோ கூட மறந்துபோயிருக்கக்கூடியவொரு சூழலில் , அந்தக் கவிதையின் சிறப்பான ஒரு சில வரிகளோ, வர்ணனையோ, வார்த்தையலங்காரங்களோ நெஞ்சிலிருந்து அகலாமல் நிலைத்திருக்கக்கூடும். அவ்வாறான, தனித்துவமான  கவித்துவம் கொண்ட கவிதைகளை , உள்ளடக்கத்தின் வலுவோடும்கூட எழுதியிருக்கிறார், அனிதா.

மிகைப்படுத்தப்பட்ட யதார்த்தம், அழகான பொய் இவையே கவித்துவம் என்பதாக புரிந்துவைத்துக்கொண்டிருந்த எனக்கு,

/கல்லெடுத்து தண்ணீர்க் குழிகள்
பறித்துக்கொண்டிருந்தவன் மேல்/

என்கிற கவிதை வரிகளில் காணப்படுகிற  மிகைப்படுத்தப்பட்ட யதார்த்தமுமில்லாமல், அழகிய பொய்யாகவும் இல்லாமல்  அமைந்துள்ள கவித்துவம் எனக்குப் புதியதொரு உணர்தலை அளித்தது.

தன்வயப்பட்ட அனுபவங்களிலிருந்தும், அந்தரங்க உணர்வுகளிலிருந்தும் உந்தப்பட்டு இவர் எழுதியிருக்கும் கவிதைகள்,பொதுவான மானுட வாழ்விற்கும் பொதுவானதாயுள்ளது.

/உன்னிடம் ஏன் சொல்கிறேனெனத் தெரியவில்லை
சொல்லவேண்டுமெனத் தோன்றுகிறது
சொல்கிறேன்/

என்று இவரே எழுதியிருக்கும் கவிதை வரிகளைப்போல், பகிர்தலுக்கு முக்கியத்துவமில்லாத சில உணர்வுகளையும், அனுபவங்களையும் கூட பதிவு செய்திருக்கிறார். அம் மாதிரியான உணர்வுகளை இப்படித்தான் மனம் பகிர்ந்துகொள்ளத் துடிக்கும்.ஒரு பெண்ணின் அக உணர்வுகளை , இவர் தன் கவிதைகளில் நுட்பமாகப் பதிந்திருப்பதன் மூலம், ஆண் வாசகர்களுக்கும்  அவற்றை அறிந்துகொள்ள ஏதுவாகிறது. பெரும்பாலான கவிதைகளைப் படிக்குமுடிக்குந்தோறும், நம் மனக்கண் முன் ஒரு புகைப்படம்போல, ஒரு காட்சி விரிகிறது. இக் காட்சியை கவிதை வரிகள் விளக்கிக்கொண்டிராமல், தன்னகத்தே ஒளித்துவைத்திருக்கிறது.பொதுவில் சொல்லத்தயங்கும் அந்தரங்க அனுபவங்களையும், மனதின் புதிர்ப்போக்குகளையும் கூட  வெளிப்படையாக எழுதுகிறார்.புதிர்களை விடுவிக்கும் ஒரு சாகச மன நிலையை, மகிழ்ச்சியை  இவர் கவிதைகளைப் படித்துப் புரிந்துகொள்ளும்போது அடையமுடிகிறது. இந்தப் புதிரை அடையும் வகையில்  எளிமையோடே எழுதியிருக்கிறார். தனிமை குறித்த கவிதைகளும் தென்படுகிறது. பயண நேரங்களில் இவர் நிறைய கவிதைகளை அவதானித்து எழுதியிருக்கிறார்.

கவிதை வரிகளை  எங்கு முடிப்பது, எங்கே வெட்டிப் பிரிப்பது என்பதுபோன்ற கட்டமைப்பில் இவர் சிறிது கவனம் செலுத்தி,எளிமைப்படுத்தினால் வாசிப்பில் சரளத்தன்மையும், நெருக்கமும் கூடிவரும்.

உதாரணமாக,


/தனிமையை குழந்தைகளின் வெளிச்சத்தில் கரைத்துக்கொண்டிருந்த
கால் படாத புற்பரப்புகளைக் கடக்கையில்
அவனைக் கவனித்தேன்/

என்கிற வரிகளை

/தனிமையை

குழந்தைகளின் வெளிச்சத்தில் கரைத்துக்கொண்டிருந்த
கால் படாத புற்பரப்புகளைக்
கடக்கையில்
அவனைக் கவனித்தேன்/

என்று எழுதலாம்.மாதிரிக்கு இடுகிற சில கவிதைகளை தேர்ந்தெடுக்க முயலும்போது தடுமாற்றம் ஏற்படும் வகையில் நிறைய நல்லக் கவிதைகளை இத்தொகுப்பில் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.

1980 ல் செனையில் பிறந்தார்.தகவல் தொழில் நுட்பத்துறையில் தற்சமயம் பெங்களூரில் பணியாற்றுகிறார். நம்பிக்கைக்குரிய இளம் கவிஞர்களில் ஒருவராக அடையாளப்படும் இவரது கவிதைகள் பிரபல வணிக மற்றும் சிற்றிதழ்களில் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. இது இவரின் முதல் தொகுப்பு.


நூலின் மதிப்புரையில் அமைந்துள்ள வரிகள்..,

”வரையறுக்கபட்ட தனது வெளிகளுக்குள் தனது அந்தரங்கமான பிரபஞ்சத்தை உருவாக்கிக் கொள்ளும் அனிதாவின் இக்கவிதைகள் வாழ்வின் சிடுக்கான கணங்களை நிம்மதியின்மையுடன் எதிர்கொள்கின்றன. அன்றாட வாழ்வின், உறவுகளின் புதிர் மிகுந்த தருணங்களை கடந்துசெல்லும்போது ஏற்படும் பரவசங்களும் பதட்டங்களும் இயல்பாக பதிவாகும் இக்கவிதைகள் தனிமையின் இறுக்கம் நிரம்பியவை. இது அனிதாவின் முதல் தொகுப்பு

இவரின் வலைப்பூ முகவரி இதழ்கள் (http://idhazhgal.blogspot.com/)

கனவு கலையாத கடற்கன்னி தொகுப்பிலிருந்து சில கவிதைகள்




நினைக்காத வேறொன்று

எல்லாம் சரியாய் அமைந்துவிட்டது இம்முறை.
புதுத்துணி, நளினமாய் செருப்பு, நகபூச்சு,
வேர்க்கடலை, அவித்த சோளமென
நினைத்ததெல்லாம் வாங்கிவிட்டோம்.
பேருந்தில் ஏறி ஆட்டோ பிடித்து
சிற்றுண்டி விடுதியில் உணவு முடித்து
வீடு திரும்பியதும் கவனித்தேன்
வாங்கிய புதுஜோடி செருப்பைக் காணவில்லை.

ஹோட்டலில் தான் தவறவிட்டிருக்கவேண்டும்.
தொந்தி அழுந்த குனிந்துத் தேடிய முதலாளி
இல்லையேம்மா என்றார்.
தோசை சுடுபரும், காபி ஆற்றுபரும்,
பார்சல் ட்டுபரும் கூடி பேசியடியிருந்தார்கள்

கிடைக்கவேண்டுமென்று இருந்தால் கிடைக்குமென
நினைத்தடி வந்துவிட்டேன்.
ம்பாஷணைகளில் கலந்துக்கொள்ளாமல்
மேஜை துடைத்துக் கொண்டிருந்தன்
அன்றிரவு வில் வந்தான்.

கற்பு...

இரவு நேர பேருந்து பயணத்தின்
அரை உறக்கத்தினூடே...
ரகசியமாய் இடை வருடும்
பின் இருக்கை மிருகம்...

காமமும் கோபமும்
ஒருசேர கிளர்ந்தெழ,

வருடலின் சுகம் மீறியும்
"பளாரென" அறைகிறேன்...

என் வருகையை
எதிர்நோக்கி
தலையணை கட்டித்தூங்கும்-

கணவன் முகம் நினைத்து...

ஒற்றை ரோஜா...

விடுதி அறையை சுத்தம் செய்கையில்
இரும்பு பீரோ இடுக்கிலிருந்து
பூந்துடைப்பத்தில் ஒட்டிக்கொண்டு வந்தது
நீள் காம்புமாய் ஒடியும் இலைகளுமாய்
கறுத்துவிட்டிருந்த ஒற்றை ரோஜா.

எனக்குமுன் இருந்தவரோ
அதற்குமுன் இருந்தவரோ
யாருடையதாகவும் இருக்கலாம்.

ந்ததா றுத்ததா எனத் தெரியாதட்சத்தில்
ல்விலக்கி தூசு அகற்றி சுவரில் ஒட்டிவிட்டேன்.

கொடுத்தரும் பெற்றரும்
இன்னும் பிரியாமல் இருக்கவும் கூடும்.

என் க்கள்

விளம்பப் கைகளை
வாய் பிளந்து வெறித்தடி ர்கிறது
இந்தழைப்பம்

கூரைத் தொட்டு துருக்கம்பிகளில் ழிந்து
தொடைநனைக்கும்
ன்னலோர ஈரம் உதடு சுழிக்கச்செய்கிறது

மிகமெல்லியஇசையாலும் குறைக்க
முடியவில்லை
அகண்டதோள் சாய்ந்து ழை சிக்கும்
முன்னிருப்பள் மீதானதுவேஷத்தை

ச்சீட்டை மோதிரஇடுக்கில் சொருகி
இருந்தளின்
ட்டைச்சரிகைக்கு பொருந்தாத
நிறக்கவைப்பற்றி
சொல்லலாமென்றிருந்தபோது

ற்சூடு அடங்காத குறுகியத்
தெருமுனையில்
லுங்காமல் இறக்கிவிட்டு
ற்றங்களின்றி ணிக்கிறார்கள்
இத்தனை நேரமும் னிமை தீண்டாது
என்னை தாங்கிப் பிடித்திருந்த

என் க்கள்

குளத்துப் பறவை


தங்கம் தெளித்த கோவில் குளத்தில்
நீர் கிழிக்காமல் ஊர்ந்துக் கொண்டிருந்தன
வெள்ளைப் வைகள்
ல்லெடுத்துத் ண்ணீர் குழிகள் றித்துக்கொண்டிருந்தன் மேல்
எச்சம் ழித்து ந்தது இன்னுமொன்று.
ஏதோ அதனாலியன்றது.

காட்டுக்கு சொந்தக்காரன்
உதிரும் இலைகள் ஒவ்வொன்றாய் எடுத்து
மீண்டும் மரத்தில் பதித்தாய்
உன் விரல்பட்ட சருகுகள் பச்சை நிறமாயின

பழுப்படைந்த இறகுகளின் வண்ண சலிப்பை
பூக்கள் பிழிந்து நிறம் மாற்றினாய்

காடறுக்க வந்தவனை மலரதிராது சவமாக்கினாய்
மலையேறி குழி இறங்கி
மூளை மங்க உணவு பரிமாறினாய்
நாசிக்குள் பனி உரிந்தபடி
உள்ளங்கை வெப்பம் உணர்த்தினாய்

இன்னும்
குகை புகும் ரயிலின் வெளிச்சமாய்
விரைத்த விரல்களினூடே
ஒழுகும் நினைவுகளாய்
முறிக்கும் சோம்பலில் நிறைந்த திமிராய்
என்னன்னவாயோ நீ இருக்கிறாய்

இருந்தும் சருகுகள் சருகுகளாயும்
மங்கிய சிறகுகள் மங்கியவையாவும்
செரிக்கின்ற மெல்லுணவும்
எனக்குப் பிடிக்கும்

நினைவில் கொள்
நான் ஒருபோதும் எழுதப்போவதில்லை
உனக்கான கவிதைகளை

 நன்றி - தடாகம்

6 comments:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல கவிதைகள்.நல்ல அறிமுகம்.நன்றி .

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

புத்தாண்டு வாழ்த்துகள்.

hayyram said...

gud.

regards
ram

www.hayyram.blogspot.com

கார்த்திகைப் பாண்டியன் said...

கவிதைகள் கவனிக்க வைக்கின்றன தல.. அறிமுகத்துக்கு நன்றி..:-)))

"உழவன்" "Uzhavan" said...

அனிதாவின் கவிதைகளனைத்தும் அருமை.
நல்ல தேர்வு.

ச.முத்துவேல் said...

நன்றி ஸ்ரீ.புத்தாண்டு&பொங்கல் வாழ்த்துக்கள்(லேட்டா சொல்றதுல இப்படியொரு வசதியிருக்குல்ல)

நன்றி ஹேராம். நல்வரவாகுக.

நன்றி ஸ்ரீ

நன்றி உழவன்