நன்றி -குங்குமம்
Thursday, June 11, 2009
மீண்டும் குங்குமத்தில் என் வலைப்பூ
நன்றி -குங்குமம்
Saturday, June 6, 2009
கடவு -கூடல் சங்கமம்-2009

தமிழின் இலக்கிய வெளியில் முக்கிய நிகழ்வான கடவு அமைப்பு நடத்தும் "கூடல் சங்கமம் "மதுரையில் ஜூன்27,28 நடைபெறுகிறது கவிதை,சிறுகதை குறித்த கருத்தரங்குகள் இரண்டு நாட்களாக நடைபெறுகிறது. நூற்றுக்கும் மேற்ப்பட்ட தமிழின் முக்கிய படைப்பாளிகள் , எழுத்தாளர்கள் ,கவிஞர்கள் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வு இது .அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படிக்கு கேட்டு கொள்ளப்படுகிறது.அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது .
இலக்கிய நண்பர்கள் இத்தகவலை அனைத்து இலக்கிய நண்பர்களுக்கும் அனுப்பிவைக்கும்படிக்கும் ,இந்நிகழ்வை பற்றி நேரிலும் ,தொலை பேசி, மின் அஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழியாகவும் ,இலக்கிய நண்பர்கள் அனைவருக்கும் எந்த வித வேறுபாடுமின்றி தெரியப்படுத்துங்கள் .
"தங்குதடையின்றி இலக்கியம் செழிக்கட்டும் "
கடவு
இலக்கிய அமைப்பு நடத்தும்
கூடல் சங்கமம் -2009
கவிதை ,சிறுகதை குறித்த கருத்தரங்கு
நாள் :27,28-06-2009
இடம் :பாஸ்கர சேதுபதி அரங்கு,ஓயாசிஸ் உணவகம் ,அழகர் கோயில் ரோடு ,மதுரை
நிகழ்வு குறித்த தொடர்புக்கு .
9659016277,9360282812,9366669469 / koodalsangamam@gmail.com
Tuesday, May 26, 2009
“ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது”- மகாதேவன்
எல்லாமே நல்ல கவிதைகள்.ஒரு அனுபத்தை மட்டும் பகிர்வதாக நிறைய கவிதைகள் சிறுகதைத் தன்மையோடு அமைந்திருந்தது. ஆனால், ஒவ்வொன்றும் வித்தியாசமான, பகிரப்படவேண்டிய அனுபவங்கள், நிகழ்வுகள். சிறுகதைத் தன்மையோடானவை.சுயம் பற்றிய பிம்பம் குறித்து கவலையில்லாமல் வெளிப்படையாக, நேர்மையாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார்.எல்
எல்லாமே பெரிய நீண்ட கவிதைகள். எனவே தட்டச்ச எளிதாக இல்லாதபடியாலும், நீங்களும் பார்த்ததும் பயந்து ஓடிவிடக்கூடாது என்பதாலும் ஒரே ஒரு கவிதையை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.இக் கவிதைகூட தேர்ந்தெடுத்த ஒன்று அல்ல.எதேச்சையாக எடுத்த ஒன்றுதான்.
வெளிச்சம் வெப்பமாகத் தொடங்கும் வேளையில்
உடைந்த நடைபாதை வழியே
ஓடி ஓடி வருவாய்
ஷட்டர்களுக்கான திறவுகோல்களுடன்
வாடிக்கையாளர் அற்ற மதிய வேளைகளிலும்
ஷோகேஸ் பொம்மைக்கருகில் நின்றபடி
வெறித்துப் பார்த்திருப்பாய் தகிக்கும் தார்ச்சாலையை
இரவுச்சூடன் ஏற்றி திருஷ்டிக் காய் உடைத்த பின்
மதிய உணவு டிபன் பாக்ஸைக்
கக்கத்தில் இடுக்கியபடி மறைந்து போவாய்
அருகிலிருக்கும் இருளொன்றின் வழியாக
வண்ணத்துணிகளை விரித்துப் போடுவதிலும்
மடிப்புக் கலையாமல் அடுக்கி வைப்பதிலும்
நிபுணத்துவம் அடைந்துவிட்டிருக்கிறாய்
குளிர்சாதன கண்ணாடி அறையிலிருந்து
புன்னகையுடன் மீள கற்றுக்கொண்டுவிட்டிருக்கிறாய்
உனக்குத் தெரியுமா
உன் முதலாளி வீட்டில்
இன்னொரு முதலாளி பிறந்திருப்பது.
தமிழினி வெளியீடு
ரூ.20.
முதல் பதிப்பு டிசம்பர் 2000
Thursday, May 14, 2009
தேவதேவனின் கவிதை
தந்தையரும் குழந்தைகளும்
அவன் தன் தச்சுப்பட்டறையில்
உண்மையாகவே அவைகளைச் செய்தாக வேண்டும்
அவன் குழந்தைகள் அவனைச் சுற்றி அங்கே
பொம்மைகளாக அவைகளைச் செய்து விளையாடி மகிழ.
-தேவதேவன்
Monday, May 4, 2009
குங்குமம்... இந்த வாரம்..என் வலைப்பூஊஊ
Saturday, April 4, 2009
இரவுக்கு முன்பு வருவது மாலை (தொடர்ச்சி)
Thursday, April 2, 2009
இரவுக்கு முன்பு வருவது மாலை
எழுத்தாளர் ஆதவன் அவர்களின் எழுத்துக்களை இதற்கு முன் நான் படித்திருக்கிறேனென்றால், அவர் எழுதிய நூல்களின் சில தலைப்புக்களை மட்டும்தான் சொல்லலாம். இப்படியொரு சூழ்நிலையில் நான் படித்ததுதான், இரவுக்கு முன்பு வருவது மாலை என்கிற அவரின் குறு நாவல் தொகுப்பு. மொத்தம் ஆறு குறு நாவல்கள்.
1. இரவுக்கு முன்பு வருவது மாலை
2. சிறகுகள்
3. மீட்சியைத் தேடி
4. கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்
5. நதியும் மலையும்
6. பெண், தோழி, தலைவி.
இவற்றில், ”பெண், தோழி, தலைவி” என்கிற கதை வேறெந்தத் தொகுப்புகளிலும் இடம்பெறாதது.கிட்டத்தட்ட 1960 களுக்குப் பிறகான காலக்கட்டங்களில் எழுதப்பட்டவை இவை அனைத்தும் என்று அறிய நேருகிறபோது சற்று ஆச்சரியமாகத்தானிருக்கிறது. காரணம், புதுமையும், இளமையான எழுத்து நடையும் தான். லேசான நகைச்சுவை உணர்வும் விரவிக் கிடக்கிறது.
ஒரு கலங்கிய குட்டை, பிறகு தெளிவடைவதைப்போல, கிட்டத்தட்ட எல்லாக்கதைகளிலுமே, கதை மாந்தர்கள் தெளிவு பெறுகிறார்கள். அவ்வகையில், இக்கதைகள் அர்த்தமுள்ளவை.
ஆசிரியர் புதுதில்லியில் இருந்திருக்கிறார் என்பதால், இவரின் இந்த குறு நாவல்களில் எந்த வகையிலாவது புது தில்லி இடம் பெறுகிறது. (பாலசந்தர் படங்களில் பாரதியார் வருவது போல) நடுத்தர, அலுவலக ஊழியர்களின், வாழ்வை அனுபவித்துச் சித்தரிக்கிறார்.
சிறகுகள்
ஒரு இளம்பெண்ணின் கடைசிக் கல்லூரி நாளோடுத் துவங்கும் இக்கதை, அவளின் திருமண நாளுக்கான முந்தின இரவு வரை நடைபெறும் காலக்கட்டத்தைச் சித்தரிக்கிறது.இக்கதையைப் படிக்கும்போது, எனக்கு கண்மணிகுணசேகரனின் அஞ்சலை படித்த நினைவு லேசாய் வந்து போனது. காரணம் இரண்டு அம்சங்கள்.
1.ஒரு ஆண் ஆசிரியர், ஒரு பெண்ணின் மன ஓட்டங்களை நுட்பமாகச் சித்தரித்திருப்பது.
2.கதை நகர்வுக்கு ஒட்டிய தத்ரூபமான காட்சி விவரணைகள்.
நான் நிறையப் படித்தது இல்லை என்பதால் எனக்கு இப்படி மட்டுமே ஒப்பீடு எழுகிறது. ஒரு வகையில் இக்கதை பெண்ணிய எழுத்து என்றால், மறுக்கமுடியாது. ”அம்மா என்பவள் வீட்டுவேலைகளுக்கெல்லாம் மேலே, வீட்டைக் காவல் உத்தியோகம் வேறு செய்கிறாள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. பெண்களேக்கூட என்ன செய்கிறீர்கள் என்று கேட்கப்பட்டால், ”வீட்டில்தான் இருக்கிறேன், சும்மாதான் இருக்கிறேன்” என்று சொல்கிறார்கள். ஆனால், வீட்டு வேலைகளையும், வீட்டைக் காவல் காப்பதையும் பெண்கள் செய்யும் உத்தியோகம் என்கிறார் ஆசிரியர்.சிறகுகள் என்கிறத் தலைப்பு ,ஒரு பெண், பிறந்த வீட்டிலிருந்து, புக்ககம் செல்வதற்கானக் காலக்கட்டத்தைச் சுட்டிக்காட்டும் வகையில், சொல்லப்பட்டிருக்கிறது.அதே சமயம் பெண் விடுதலைக்கான காலக்கட்டத்தைச் சுட்டிக்காட்டுவதாகவும் அமைகிறது. வளர்ந்துவிட்டப் பையனுக்கும், தந்தைக்கும் இருக்கும் நெருக்கத்தைவிட மகள்- தாய் நெருக்கம் அன்னியோன்யமானதும், கூடுதல் அந்தரங்க நெருக்கம் கொண்டதாகவும் இருக்கும் என்கிற யதார்த்தத்தை, இக்கதையில் இயல்பாகக் காணமுடியும். அதேபோல், ஒரு பதின் வயதுப் பெண்ணின் மன ஓட்டங்கள், திருமணம், காதல் குறித்த ஏக்கங்கள், கனவுகள், அச்சங்கள் நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்குள் நடைபெறும் காட்சிகள், அவரவர் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு, மிக இயல்பாக கதை நகர்த்தப்பட்டுள்ளது.ஒரு காட்சியில், கதையின் நாயகியை எதிர் வீட்டு இளைஞன் பார்ப்பான். அவள் நேராக வீட்டிற்குள் சென்று கண்ணாடியைப் பார்த்துக்கொள்வாள். உடனேயே,” எதற்காக நான் இப்படிப் பார்த்துக்கொள்கிறேன்?அவன் என்னைப் பார்த்தபோது நான் எப்படி இருந்தேன் என்று தெரிந்துகொள்ளவா?”
இதுபோல், ரசனைக்குரிய, உளவியல் உண்மை சார்ந்த காட்சிகள் பரவலாகத் தென்படுகிறது. வேலைக்குச் செல்வது அலுப்பான செயல் என்றும், அதற்குக் காரணம் நிர்ப்பந்தம்தான் எனும் விவரணையும் அப்பாக் கதாபாத்திரத்திலன் மூலம் சொல்லப்பட்டிருக்கும்.
இரவுக்கு முன்பு வருவது மாலை
இக்கதை படித்து முடித்தது பாலசந்தர் அவர்களின் படம் ஒன்று பார்த்ததுபோல் இருந்தது.அவரின் நவீனமான மனிதர்கள், பழக்கங்கள், புதுமை, என்று பல அம்சங்கள் இவ்வாறு நான் எண்ணிக்கொள்ள காரணமாகலாம்.
தனித்தன்மையான, ரசனையான ஒரு ஆணும், பெண்ணும் விளையாட்டாக(விதியின் ?) சந்தித்துக்கொள்கிறார்கள்.அவர்கள் புதிதாகச் சந்தித்துக்கொள்வதால், ஒருவருக்கொருவர் கதையினூடே அறிமுகமாகும்போது, வாசகர்களுக்கு சேர்ந்து அறிமுகம் ஆகிறார்கள். இரு intelectuals சந்தித்துக்கொண்டதும் நெருங்கிப் பழகுகிறார்கள். புகைப் பிடிக்கிறார்கள்.கட்டிப் பிடிக்கிறார்கள். முத்தம் கொடுக்கிறார்கள். நீச்சல் குளத்திற்குச் சென்று நீந்துகிறார்கள்.எனவே, படிப்பதற்கு விறு விறுப்பாகயிருக்கிறது.கடைசியில், எதுவரைப் போகிறார்கள், போனார்களா இல்லையா என்கிற ஆவலே படித்துமுடிக்க வைத்துவிடும். இருவரின் மனவோட்டங்களும் மாறி மாறி விவரிக்கப்பட்டும்,கதைக்குள் கதைகளாகவும்,கற்பனைகளாகவும் நீள்கிறது. இருவருமே சற்று அசாதாராணமானவர்களாக இருப்பதால், இவர்களின் உரையாடலில் பல சுவாரசியமான தெறிப்புகள்.கதை சட்டென்று முடிந்துவிடும்.
அசாதாராணமான நிகழ்வுகள், மனிதர்கள் என்பதாலேயே இக்கதை ஒரு தனி அனுபவம். நன்றாக இருக்கிறது என்றுதான் சொல்வேன்.
மீட்சியைத் தேடி
புது தில்லியிலிருந்து தன் சித்தப்பா வீட்டிற்கு வருகிறான், சங்கர்.மாநகர சூழலிலேயே
வளர்ந்த அவனுக்கு ஏனோ அந்த நவ நாகரிக வாழ்க்கையும்,அது தரும் போலியான வேடங்களும், நிர்ப்பந்தங்களும் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.தஞ்சாவூர் வந்திறங்கி, பேருந்தில் பயணிக்கும்போது, கருப்பான நிறமுடையவளாய், காவியேறிய பற்களுடனிருக்கும் இளந்தாய் ஒருத்தியிடம் கூட ஏதோ ஒரு அழகு இருப்பதாய்க் கருதும், உணர்வெழுச்சிப் பெற்ற நிலையில் இருக்கிறான்.
இவ்வாறான, மனவெழுச்சிப் பெற்ற சுழலில், சித்தப்பா வீடிருக்கும் திருவையாறும், சித்தப்பாக் குடும்பத்தினரின் எளிய வாழ்க்கை முறையும்,கிராமம் சார் நிலங்களும், காவிரியும்
அவனுக்கு மிகவும் பிடித்துப்போகிறது.அக் கிராம வாழ்வை அவன் நேசிக்கத்தொடங்குவதோடு, அதற்காக ஏங்கவும், வருந்தவும் செய்கிறான். பின் ஊருக்குப் புறப்படும்போது தெளிவு பெற்றவனாய், உற்சாகமாய் திரும்புகிறான்.திருவையாற்றில் அவனுக்கு ஏற்படும் நிகழ்வுகளும், சித்தப்பாவுடனான கலந்துரையாடலும் என ஒட்டுமொத்தமாய் அவனுக்குள் சலனத்தை ஏற்படுத்தி, ஒரு தெளிவுக்கு இட்டுச் செல்கிறது.
நல்ல கதை. எளிய வாசகனுக்கும், பிடிக்கக்கூடிய வகையில், திருப்புமுனையோடு அமைந்த கதை.
(தொடரும்…)
Monday, March 30, 2009
யாத்ராவை தெரிந்துகொள்ளுங்கள்
தொடர்ச்சியாக உயிரோசை, நவீன விருட்சம், மற்றும் சில வலைத்தளங்கள் அவர்களாகவே விரும்பிக் கேட்டுப் பிரசுரம் செய்வது என துவக்க நிலையிலேயே பிரமிப்பூட்டுகிறார். இவர் அடையக் காத்திருக்கும் வெற்றிகள், உச்சம் வெகு தொலைவிலில்லை. அனேகமாக, வருகிற புத்தகக் கண்காட்சியில், இவரின் தொகுப்பு கிடைக்கப் பெறலாம்.
Wednesday, March 25, 2009
அப்பாஸ் அவர்களின் கவிதை.
Monday, March 16, 2009
அய்யப்ப மாதவனின் நிசி அகவல்-விமர்சனக்கூட்டம்
எனக்குத் தெரிஞ்சது, நினைவு வந்தது அவ்வளவுதான்.


