முதன்முதலில்
’சார்’ என்று
அழைக்கப்பட்டபோது
அத்தனை தாழ்ந்துகிடந்த ஒரு
ஊரின்
அதனினும் பள்ளத்தில் கிடந்த
சின்னஞ் சிறியனாயிருந்த நான்
விண்ணேகிப் பறந்தேன்.
இப்போது நினைக்குந்தோறும்
வெட்கச் சிரிப்பாயிருக்கிறது.
என்னை முதன்முதலில்
’சார்’ என்று அழைத்தவரை
மறுமுறை
கண்டிராவிடினும்
இப்போதும்
நினைவில் திகழும்
அவர் ஒரு
‘’நல்ல சார்’’
No comments:
Post a Comment