Wednesday, June 10, 2020

ல லவ்யூ ந நண்பா !

                கவிதையெனும் சிவதனுசு வேண்டி, காட்டில் ஜடாமுடி தரித்து, உடல் மேல் புற்றுறைய தவம் கிடக்க வேண்டிய தேவை ஜான் சுந்தருக்கு இல்லை வசீகரம்,கவித்துவம்,இசைத்தன்மை இவற்றோடு, கூடுதல் சிறப்பாய் குறும்பும் கலந்த கவிதை மொழி ஜான் சுந்தருடையது. வாழ்வே இசையும் கவிதையுமாய் ஆனவர் என்பதாலோ! நன்கு கைவரப் பெற்றுவிட்ட தொழில் நுட்பமும் சேர்ந்துகொள்வதால் சொல்லிலும் புதிதாய்,சுவையிலும் புதிதாய் கவிதைகளை அன்றாடக் காட்சிகளிலிருந்தே கூட அள்ளிவிட முடிகிறது.கதைகதையாய், பக்கம் பக்கமாய் நீட்டிக்கவல்லவற்றை கவிதைகளில் சிக்கெனப் பிடித்து ருசியாகக் கொடுத்துவிடுகிறார்.

                   
கைமூங்கில் தாங்கும் காட்சியிழந்தவனும் உள்ள எங்கள் அரங்கம்
ருசிக்கும் ஐஸ்கிரீமுக்காக நீங்கள் இன்னும் கொம்பூதுங்கள், ஜான்! இன்னும் ஆயிரஞ்சொல் வேண்டும். எம்மோடு சேர்ந்து, தளிர்க் கரங்களை நீட்டி
தமிழே உங்களை அணைத்துக் கொண்டாகிவிட்டது. இன்னுமின்னும்
ஐந்தாறு மார்புகள் முளைக்கட்டும். உங்கள் ரவிக்கைச் சுகந்தம் போலொன்று
கிடைத்துக்கொண்டேயிருக்கட்டும்.

No comments: