Tuesday, November 20, 2012

தீர்ப்பு


எண்ணிலடங்காத் துளிகலாலான
ஒற்றை நதி
நடக்கிறது
எண்ணிலடங்களடங்காக் கால்களால்
படைவீரர்களின் அணிவகுப்பாய்
தடைகளை உடைக்கிறது
வறட்சியை நனைத்து பசுமையாக்குகிறது
பாதைகளை உருவாக்குகிறது
எல்லைகளை அழிக்கிறது
தாவரங்களின் வேர் நாவுகளுக்கும்
விலங்குகளின்  நாக்குவேர்களுக்கும்
ஊர்கள் ஊர்களாய் தேடிச் சென்று
நடமாடும் தண்ணீர்ப் பந்தலாய்
தாகச்சூடு தணிக்கிறது

வீழும் அருவியில்
வானத்துப் புள்ளினங்களாவது அருந்தவியலுமா?
மீனினங்களாவது நீந்த முடியுமா?

ஒற்றைக்காலும் வானம் பார்க்க
தலைக்குப்புற விழுகிற அருவி
நீரின் வீழ்ச்சிதான்.

Thursday, November 8, 2012

இறுதி மூச்சில் தாலிப்பனை

இந்த வலைப்பூவில் எப்போதுமே அதிகளவில்  பார்க்கப்படும் பதிவாக இருப்பது தாலிப்பனை படங்கள் கொண்ட இந்தப் பதிவுகள்

http://thooralkavithai.blogspot.com/2009/12/blog-post_16.html

http://thooralkavithai.blogspot.in/2009/12/blog-post_29.html

மேற்கண்ட பதிவுகளில் இடம்பெற்ற தாலிப்பனை தன் ஆயுளின் இறுதிக்காலத்தில் பூப்   பூத்து நிற்கிறது. அதன் தற்போதைய படங்கள்

 நன்றிகளுடன் பகிர்ந்துகொள்ளும் சுட்டி http://www.jeyamohan.in/?p=6063