Thursday, June 19, 2008

தமிழில் ஓரெழுத்துச் சொற்கள்

ஆங்கிலத்தில் a என்ற ஒரு எழுத்து, ஒரு என்ற பொருள்பட அமைந்துள்ளது.அது தவிர I என்ற ஓரெழுத்து நான் என்ற பொருள்பட அமைந்துள்ளது.இவை தவிர ஓரெழுத்துச் சொற்கள் இருப்பதாக தெரியவில்லை.ஆனால் தமிழில் நிறைய சொற்கள் உள்ளன.அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம்.

தமிழில் ஓரெழுத்துச் சொற்கள் (தனித்தே நின்று பொருள் தருபவை)

ஆ - பசு (ஆ-வின் பால் )
ஈ - உயிரி
ஏ - விளிச்சொல்
ஓ - விளிச்சொல்
கோ - (மன்னர்)
கை - கரம்
மை - எழுது பொருள்
வை - கட்டளைச் சொல்(கீழே வை...)
பா - பாடல்
தா - கொடு
நா - நாக்கு,நான்கு...
தீ - நெருப்பு
தை -(மாதம்)
நீ - முன்னிலை சுட்டும் சொல்
பூ - மலர்
பை - கைப்பை
போ -கட்டளைச் சொல்
மா - பெரிய, மாங்கனி தொடர்பான ...
வா - கட்டளைச் சொல்

நினைவிலிருந்து கூர்ந்து எழுதப்பட்டவை மட்டுமே இவை.மேலும் பல சொற்கள் இருக்கும்.அவற்றை தெரிந்தவர்கள் ,கொடுத்து உதவலாம். மின்னஞ்சல் முகவரி-muthuvelsa@gmail.com.

‘’ம் ‘’-பற்றி ஒரு பார்வை

*குறுகிய மாத்திரையில் ஒலிக்கும்போது ஆம் என்ற பொருள்படும்.
*சற்று நீட்டி ஒலித்து, தொக்கி நிற்கும்போது கேள்வியாகிறது.
*நன்றாக நீட்டி ராகம் போட்டு ஒலிக்கும்போது,ஆச்சரியச் சொல்
*ஷோபா சக்தி அவர்களின் ஒரு புதினத்தின் பெயர் ‘ம்’ தான்.